FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பசுமைச்சாலை தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம்: தமிழிசை செளந்தரராஜன்

சென்னை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பாஜகவின் தமிழகத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தில்லியில் இன்று செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.

Updated On : 28 ஜூன் 2018, 8:47 pm IST
பகிர்:

புது தில்லி: சென்னை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பாஜகவின் தமிழகத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தில்லியில் இன்று செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.

தில்லி வந்திருந்த தமிழிசை செளந்தரராஜன், மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியை அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சேலம் - சென்னை எட்டுவழி பசுமை வழிச்சாலை மக்களுக்கு பயன்தரக்கூடியது. இதனால், பின்தங்கியுள்ள 5 தமிழக மாவட்டங்கள் பயன்பெறும். இந்த பசுமை வழிச்சாலை தொடா்பாக மக்களிடம் திட்டமிட்ட வகையில் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தொடா்பாக விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளுமாறு தமிழக அரசிடம் அண்மையில் கோரியிருந்தேன். இதே கோரிக்கையை நிதின் கட்கரியிடம் இன்று வைத்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments