குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி
தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுதில்லி: தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த 17-வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைக்க பிரதமர் உரிமை கோருவது மற்றும் பதவி பிரமாணம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், தில்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி மக்களவைக் குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.