FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு!

காதலன்: நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?

Updated On : 5 ஏப்ரல் 2019, 3:26 pm IST
பகிர்:

வீக் எண்ட் ஜோக்ஸ் - கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ஓடிப் போக நினைத்த காதல் ஜோடி

காதலன்: நாம ஓடிப்போய் கல்யாணம்  பண்ணிக்கலாமா?
காதலி: அடப் பாவி... இருந்த ஒரு பைக்கையும் வித்துட்டியா?

Advertisement

Advertisement

***

மீண்டும் ஒரு வாழைப்பழம்

வாழைப்பழம் எவ்வளவு?
ஏழு ரூபாய்
2 ரூபாய்க்கு வராதா?
தோல் மட்டும்தான் வரும் பரவாயில்லையா?
அப்படீன்னா தோலை எடுத்துட்டு பழம் மட்டும் 5 ரூபாய்க்கு கொடுங்க

**

மன்னிப்பு...மன்னிப்பு...மன்னிப்பு

நீ உன் மனைவியிடம்மன்னிப்பு கேட்டியாமே
ஆமா... ஆமா... ஆமா...
ஏன் மூணு தடவை சொல்றே?
எனக்கு மூணு பொண்டாட்டிங்க

**

அறியாத மனசு

சாப்பிட வந்தவர்: ஏம்ப்பா... கத்தரிக்காயை அப்படியே முழுசா போட்டிருக்கியே... ஏன்?
சர்வர்: அரி'யாமல் செய்த தவறுக்கு வருந்துகிறோம் சார்...

- டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

பயம் பயமாய் இருக்கிறது டாக்டர்!

டாக்டர் அந்த நர்ஸை மாத்திடுங்க
ஏன்?
பேஷண்டை நல்லா கவனிச்சுக்கன்னு நீங்க சொன்னீங்க. அவங்க ராத்திரி பூரா
என் பக்கத்துல உட்கார்ந்து என் முகத்தையே பார்த்துக்கிட்டிருந்தாங்க. எனக்குப் பயமா இருக்கு'

- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்...போ...போ..போ

டாக்டர் ஆபரேஷன்ல நான் பொழைச்சுக்குவேனா?
அதை ஆபரேஷன் முடிஞ்சாதான் சொல்ல முடியும்?
அப்போ ஆவியா வந்து நான் கேட்கணுமா டாக்டர்?

- கு.அருணாசலம், தென்காசி.

ஒரு நாள் முதல்வர்!

தலைவர் நிறைய கல்லூரிகளை ஏன் நடத்துகிறார்?
நிறையப் பேர் முதல்வர் பதவியை எதிர்பார்ப்பாங்களே

- எஸ்.மோகன், கோவில்பட்டி.

ஃபாரின் சரக்கு

ஹலோ... நான்தான் உங்க பக்கத்துவீட்டுக்காரர் பேசுறேன். எங்கே இருக்கீங்க? உங்க வீட்டு பூட்டை உடைச்சு திருடன் புகுந்துட்டான்
ஐயோ அது ஃபாரின் பூட்டாச்சே

- சம்பத்குமாரி, பொன்மலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments