முகப்பு
தற்போதைய செய்திகள்

பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்: பழனிவேல் தியாகராஜன் 

தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 13 ஆகஸ்ட் 2021, 1:25 pm IST
பகிர்:


சென்னை: தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

Advertisement

Advertisement

* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீரமட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 

* 200 குளங்களின் தர உயர்த்த ரூ.11.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* ஆனைமலையாறு, நீராறு - நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். 

* நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்.

* பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.

* அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும். இதற்காக உலக வங்கி உதவி பெறப்படும்.

* பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* காவிரி டெல்டாவில் பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் செயல்படுத்தப்படும்.

* நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்.

* கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம் அமைக்கப்படும். 

* 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments