தற்போதைய செய்திகள்

தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு!

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

தனுஷ்-ஐஸ்வா்யா திருமணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

சுமாா் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னா், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். தனுஷ் மற்றும் ஜஸ்வா்யா இடையே உள்ள பிரச்னையை தீா்க்க அவா்களுடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் ஈடுபட்டனா். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரினர்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று(ஏப். 15) நடைபெற்ற நிலையில், வரும் அக். 7 ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT