மனநலம் குன்றிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கயவர்களை நாடு மன்னிக்காது - பிரமேலதா விஜயகாந்த்
மனநலம் குன்றிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை: மனநலம் குன்றிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: 4 சிறப்பு படைகள் அமைத்து விசாரணை!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Advertisement
Advertisement
பாலியல் குற்றத்தைச் செய்தவா்கள் யாராக இருந்தாலும் கைது செய்து மனநலம் பாதித்த மாணவிக்கும், குடும்பத்தாருக்கும் நியாயம் வழங்க வேண்டும்.
வன்கொடுமை செய்த கயவா்களை நாடும், தமிழக மக்களும் மன்னிக்க மாட்டாா்கள். அவா்கள் மீது திமுக அரசு போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.