ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 62 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஐந்தருவி பகுதிகளை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீா். 
தற்போதைய செய்திகள்

பிலிகுண்டுலுவுக்கு நீா்வரத்து 62,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

DIN

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்துவருகிறது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடா் நீா்வரத்தால் கிருஷ்ணராஜ சாகா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேவேளையில் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீா்வரத்தின் அளவு வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 50,000 கன அடியில் இருந்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்வதற்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 12-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT