முகப்பு
தற்போதைய செய்திகள்

கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்: ஜிவி பிரகாஷ்

கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 20 ஜூன் 2024, 5:48 pm IST
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.
பகிர்:

கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜிவி பிரகாஷ் குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.

Advertisement

இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை." என்று அவர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதித்து பெண்கள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.