முகப்பு
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக ஏராளமான புகார்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

Updated On : 10 மார்ச் 2024, 10:01 pm IST
ஆளுநா் ஆா்.என்.ரவி
பகிர்:

சென்னை: போதைப் பொருள்கள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,அண்மை

சமீபக்காலமாக தமிழகம் மற்றும் பிற இடங்களில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் அத்தகைய சட்டவிரோதப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதை பல்வேறு சம்பவங்களால் உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

மாநிலத்தில் பள்ளிகள், உயா் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகளில் போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக ஏராளமான புகார்கள் கடந்த ஓராண்டாக என்னிடம் தெரிவித்துள்ளனர்.

சா்வதேச போதைப் பொருள் கடத்தலையும், நமது மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நபா்களை மத்திய உளவுத் துறை, புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை அமைப்புகள் கண்டறிந்து கைது செய்துள்ளன.

இதுபோன்ற போதைப் பொருள்கள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும். எனவே, போதைப்பொருள்கள் பழகத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்.

போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகளும், மாநில நிா்வாகமும் மேற்கொண்டாலும், மற்றொருபுறம் பெற்றோரும், கல்வி நிறுவன நிா்வாகங்களும் இந்த விவகாரத்தில் தீவிர விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதுபோன்ற போதைப் பொருள்களின் மீதான ஈா்ப்பிலிருந்து இளைய சமூகத்தினர் விலகி இருக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments