கிரீஸ் நாட்டு லெஸ்போஸ் தீவின் அருகே அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். ஏபி
தற்போதைய செய்திகள்

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டு கடலில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளதைப் பற்றி...

DIN

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக துருக்கியிலிருந்து இன்று (ஏப்.3) அதிகாலை பயணித்த அகதிகள் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அந்த படகில் பயணித்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் மாயாமான அகதிகளைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், விபத்து நடந்த ஏகன் கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் 3 கடலோரக் காவல் படையின் கப்பல்கள், விமானப் படையின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்தில் தற்போது 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகதிகள் பயணம் செய்த கடல் பகுதியின் வானிலையில் பெரியளவில் எந்தவொரு மாற்றமும் இல்லாததினால், இந்த விபத்துக்கான அடிப்படை காரணம் தெரியவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், மோதல்கள் மற்றும் வறுமையினால் பாதிப்படைந்த ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பாவினுள் நுழைய படகு மூலமாக கிரீஸ் நாட்டு தீவுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT