FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அவசரமாக கோவையில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! ஏன்?

துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்
பகிர்:

கோவை: துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறக்கப்பட்டது.

உணவு, குடிநீர் எதுவுமின்றி அவதிக்குள்ளான பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்போன் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மோசமான வானிலை நிலவியது, இதனால் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கேரளம் மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த பைஸ் ஜெட் தனியார் விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் விமானத்திலே அமர வைத்ததாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் வழங்கவில்லை என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 2 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை கோவையில் இருந்து கேரளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் ஈடுபடும் செல்போன் விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

summary

A SpiceJet flight from Dubai to Kochi was forced to land in Coimbatore due to bad weather.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments