சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி. 
தற்போதைய செய்திகள்

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன்படி, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சைதாப்பேட்டை, நீலாங்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகா், செனாய் நகா், அமைந்தகரை, முகப்போ் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பெய்தது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது.

இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் வரலட்சுமி(30). இவர் சனிக்கிழமை (ஆக.23) காலை அந்த பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தூய்மைப் பணிக்காக இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்க முயற்சி செய்தனா். ஆனால், அவா்களால் மீட்க முடியவில்லை.

தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா்.

இந்த சம்பவம் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நடந்ததாக அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

A sanitation worker who was engaged in cleaning work in Kannagi Nagar was electrocuted and died on the spot.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மகிந்த ராஜபக்ச

8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

ஹாரி கேன் ஹாட்ரிக்: அபார வெற்றியுடன் (6-0) சீசனை தொடங்கிய பயர்ன் மியூனிக்!

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

SCROLL FOR NEXT