கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கர்: குண்டு வெடிப்பில் ஒருவர் பலி! 3 பேர் படுகாயம்!

சத்தீஸ்கரில் பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்து ஒருவர் பலியானதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நிறுவிய குண்டுகள் வெடித்து ஒருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாராயணப்பூர் மாவட்டத்தின் குறுஷ்னர் எனும் கிராமத்தின் இருவேறு இடங்களில் இன்று (ஜன.10) நக்சல்கள் நிறுவிய நவீன குண்டுகள் வெடித்ததில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பலியானதுடன் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் வெடித்தது நக்சல்கள் நிறுவிய நவீன குண்டுகள் தான் என்பதை உறுதி செய்தனர்.

இதேப்போல், அந்த கிராமத்தின் ஆதர்-இடுல் சாலையில் பயங்கரவாதிகள் நிறுவிய நவீன வெடிகுண்டின் மீது கால்வைத்த சுபம் பொடியம் (வயது 20) என்ற இளைஞர், அது வெடித்ததில் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் நாரயணப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: போதைப் பொருள் கடத்திய வங்கதேசத்து நபர் உள்பட 2 பேர் கைது!

காடுகளுக்குள் மறைந்து வாழும் நக்சல் பயங்கரவாதிகள் அப்பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் காடுகளின் பாதைகளுக்குள் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஐ.இ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகளை நிறுவிகின்றனர். இதனால், அந்த குண்டுகளுக்கு பெரும்பாலும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்தான் பலியாகி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜன.6 அன்று நக்சல் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

தடுப்புச்சுவரில் காா் மோதி பெண் மரணம்: கணவா் உள்ளிட்ட 3 போ் காயம்

தமிழகத்தில் 37 அரசு அலுவலகங்களில் இரு நாள்களில் ரூ.37.74 லட்சம் பறிமுதல்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னோட்டப் பயிற்சி: நவ.10-இல் தொடக்கம்

ம.பி. அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருந்தில் புழுக்கள்? -அதிகாரிகள் விசாரணை

SCROLL FOR NEXT