கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! - தமிழக அரசு
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக கைத்தறித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!