முகப்பு
தற்போதைய செய்திகள்

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்

தெலங்கானாவில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 3 ஏப்ரல் 2026, 5:23 pm IST
எல்பிஜி சிலிண்டர்கள்
பகிர்:

தெலங்கானாவில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆங்காங்கே சில உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கிடைப்பதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால், இருப்பு வைத்திருக்கும் சிலிண்டா்களை பதுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தெலங்கானாவில் மார்ச் 12 முதல் இதுவரை சுமார் 3,700 சட்டவிரோத எல்பிஜி சிலிண்டர்களை நுகர்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது ரூ. 1.10 கோடி மதிப்பிலான 70 சிறிய சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 216 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கி வைப்பவர்கள் அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் எம். ஸ்டீபன் ரவீந்திரா கடந்த மார்ச் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.