முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

ஆற்காடு பகுதியில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில், கணவன் மனைவி உடல்கருகி பலியான சம்பவம்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:12 AM
தீ விபத்தில் உடல்கருகி பலியான பவன்லால்(46) மற்றும் அவரது மனைவி சுந்தரிதேவி(42). - டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:04 AM

ஆற்காடு பகுதியில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில், கணவன் மனைவி உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள தேவி நகர் என்ற பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் ஐஸ்கிரீம் கடையை நடத்தி வந்தனர்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:10 AM

இந்த நிலையில், ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கடையின் உரிமையாளரான பவன்லால்(46) மற்றும் அவரது மனைவி சுந்தரிதேவி (42) ஆகிய இருவரும் தீயில் சிக்கி கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த சம்பவம் குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஸ்கிரீம் கடையை நடத்தி வியாபாரம் செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:11 AM
summary

A tragic incident in the Arcot area, in which a husband and wife were burned to death following a fire at an ice cream manufacturing and sales outlet, has caused deep sorrow.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:11 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.