முகப்பு
லைஃப்ஸ்டைல்

ஆப்பிள் வாட்ச்சில் சேர்க்கப்படும் புதிய வசதி! மருத்துவ கருவிகளுக்கு மாற்றா?

ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 10-ல் இரத்த அழுத்தம் அளவிடும் புதிய வசதி!

Updated On : 19 மார்ச் 2024, 7:40 pm IST
ஆப்பிள்
பகிர்:

புதிதாக வரவிருக்கும் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 10-ல் பலரும் எதிர்பார்த்த முக்கிய வசதி சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்ப உலகில் தனித்துவ தயாரிப்புகளின் மூலம் எப்போதும் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆப்பிள். ஆப்பிளின் வாட்ச்சுகள் பயனர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட குறிப்பில், ஆப்பிள் சிரீஸ் 10 வாட்ச்சில் இரத்த அழுத்தத்தை அளவிடும் வசதி இணைக்கப்படவுள்ளது.

Advertisement

உயர் இரத்த அழுத்தம், பல்வேறு நேரங்களில் மோசமான உடல்நிலைக்கு காரணமாக அமையும். இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க மருத்துவமனைகளில் அதற்கான கருவி பயன்படுத்தப்படும். ஆப்பிள் இதனை எப்படி சாத்தியமாக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

ஏற்கனவே ஆப்பிளில் பயன்பாட்டில் இருக்கும் நாடித் துடிப்பு அளவிடும் சென்சாரை மாற்றியமைத்து இரத்தத்தின் வேகத்தை அளப்பதன் மூலம் அழுத்தத்தை அளவிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தாண்டு இறுதியில் புதிய ஐபோன் அறிமுகத்தோடு இந்த அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.