முகப்பு
செய்திகள்

"சுஜாதா என்னும் பன்முக ஆளுமை"- வாசகசாலை இலக்கிய அமைப்பின் முழுநாள் நிகழ்வு!

வாசகசாலையின் 25 வது நிகழ்ச்சி - "சுஜாதா என்னும் பன்முக ஆளுமை"- முழுநாள் நிகழ்வு!

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:17 PM
பகிர்:

வாசகசாலையின் 25 வது நிகழ்ச்சி - "சுஜாதா என்னும் பன்முக ஆளுமை"- முழுநாள் நிகழ்வு

தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க இலக்கிய முன்னெடுப்புகளை சாத்தியமாக்கி வரும் இளம் படைப்பாளிகள் மற்றும் வாசகர்களை உள்ளடக்கிய வாசகசாலை இலக்கிய அமைப்பு தனது 25 வது நிகழ்வாக முன்னெடுத்திருப்பது மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் பன்முக ஆளுமைத் திறனை பறை சாற்றும் நிகழ்வை. இந்நிகழ்வில் சுஜாதாவின் பிரசித்தி பெற்ற தமிழ் படைப்புகள், தமிழ் சினிமாவில் அவரது சிறப்பான பங்களிப்பு, தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் அறிமுகப்படுத்திய ரத்தினச் சுருக்க உரைநடை சிறப்பு எனப் பல அம்சங்கள் குறித்து வாசகர்கள் மற்றும் தமிழ் படைப்பாளிகளின் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

விழாவுக்கான அழைப்பிதழ்;

நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

தொலைவிலிருந்து வருகை தரும் வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் நபர்கள் கீழ்காணும் அலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தவும்.  

தொடர்புக்கு: 9942633833 / 9790443979. மின்னஞ்சல்: vasagasalai@gmail.com

நாள்: 16.04.17;

நேரம்: காலை 09.30 முதல் மாலை 06.30 வரை;

இடம்: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம்

முழு கட்டுரையைப் படிக்க →