திரெட்ஸ் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் இந்தியா! மெட்டா தகவல்
குறுகிய உரை பகிரும் தளமான திரெட்ஸ் பயன்பாட்டில் இந்தியா முன்னிலை வகிப்பதாக மெட்டா தகவல்
மெட்டா (முன்னர் பேஸ்புக்) குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் திரெட்ஸ் செயலி பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா- அதிகம் செயல்பாட்டில் உள்ள பயனர்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி, பிரபலங்கள் சார்ந்த உரையாடல்கள், விளையாட்டு ஆகிய தலைப்புகள் பிரபலமாக உள்ளதாகவும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 17.5 கோடி செயல்பாட்டில் உள்ள பயனர்களை மெட்டா கொண்டுள்ளதாக அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
உலக சராசரியை காட்டிலும் இந்திய பயனர்கள், இன்னொரு பயனரை பதிவுகளில் குறிப்பிடுவதும் (மென்ஷன்) மற்றும் தங்கள் பதிவுகளில் விடியோக்கள் பயன்படுத்துவதும் அதிகம் எனக் குறிப்பிடப்படுகிறது.
குறுகிய உரை (டெக்ஸ்ட்) பதிவுகளை இடுவதற்கான தளமாக உருவாக்கப்பட்ட திரெட்ஸ், உரையோடு சேர்த்து படங்கள் மற்றும் விடியோக்களை பகிரும் வசதியை அளிக்கிறது.
நான்கில் ஒரு பதிவு புகைப்படத்துடன் இடப்படுவதாகவும் புகைப்படங்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாகவும் திரெட்ஸ் இருப்பதாக மெட்டா அறிக்கை குறிப்பிடுகிறது. நேரடியாக திரெட்ஸில் மொபைல் கேமரா அணுகி படம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது திரெட்ஸ் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பயனர்களின் விருப்பத்திற்கேற்ப தலைப்புகளை காண்பிக்க திரெட்ஸ் செயலி வடிவமைக்கப்படுவதாகவும் மக்கள் தங்களின் ஐடியாக்கள் மற்றும் சிந்தனைகளை பகிர வசதியான தளமாக மாற்ற முயற்சிப்பதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.