FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...

சிலர் எப்போதும் உங்களைப் பின்னால் இருந்து இகழ்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் அவர்களை விட ஒருபடி முன்னால் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருங்கள்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 5:11 pm IST
பகிர்:
  1. நீங்கள் எங்கும் நிற்காமல் சென்று கொண்டே இருக்கும் வரை, நீங்கள் மெதுவாகச் செல்கிறீர்கள் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல!
  2. உங்களை விடச் சிறந்தவர்களாக இல்லாதவர்களுடன் எக்காரணம் கொண்டும் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
  3. கோபம் வரும்போது விளைவுகளை எண்ணிப்பாருங்கள்.
  4. உங்களது இலக்குகளை அடைய முடியாதென வெளிப்படையாகத் தெரிய வரும் போது, ஒருபோதும் இலக்குகளை மாற்றிக் கொள்ளாதீர்கள், செயல்படும் முறைகளை மாற்றிப் பாருங்கள்.
  5. நீங்கள் ஒரு நபரை மோசமாக வெறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களால் தோற்கடிக்கப் பட்டுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
  6. சிறந்த மனிதர்களின் தேடுதல் எப்போதும் அகம் சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் தேடுகிறார்கள். எளிய மனிதர்களின் தேடுதல் எப்போதும் புறம் சார்ந்ததாக இருக்கிறது, அவர்கள் எப்போதும் தேடலை வெளியிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.
  7. நீங்கள் எதில் இறங்குவதாக இருந்தாலும் முழு மனதுடன் இறங்குங்கள்.
  8. தங்கள் அறியாமையைப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியில் வர விரும்பும் அறிவுத்தேடல் மிக்கவர்களுக்கு மட்டுமே அறிவுரை அளியுங்கள்.
  9. எப்போதும் சிறிய அனுகூலங்களையே எதிர்பார்த்து அடுத்து கிடைப்பதாக இருக்கக்கூடிய பெரிய அனுகூலங்களை அவை முழுதாக ஈடேறும் முன் இழந்து விடாதீர்கள்.
  10. சிலர் எப்போதும் உங்களைப் பின்னால் இருந்து இகழ்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் அவர்களை விட ஒருபடி முன்னால் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments