முகப்பு
ஸ்பெஷல்

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சாக்லேட் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு அல்லது என்றுதான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

Updated On : 10 பிப்ரவரி 2021, 12:17 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சாக்லேட் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றுதான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், எல்லா வகையான சாக்லேட்டுகளும் நன்மையளிக்காது. 

சாக்லேட்டுகளில் உள்ள கோகோ எனும் பொருள் தான் அதன் சுவைக்கும், நலத்துக்கும் காரணமான ஒன்று. பல சாக்லேட்டுகளில் ரசாயனம் கலக்கப்படுகிறது. 

இந்நிலையில், ரசாயனம் கலக்காத கோகோ வேதிப்பொருள் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டுகள் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். 

Advertisement

Advertisement

► டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகிறது. 

► இதயக்கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது. 

► ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. 

► கொழுப்புகள் கரைவதாலும், சாக்லேட் சாப்பிடுவதால் மற்ற உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறைகிறது. 

► உடல்நலத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

► முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசிக்க உதவுகிறது. 

► இளமைத் தன்மைக்கு சாக்லேட்டில் உள்ள கோகோ எனும் பொருள் காரணமாக உள்ளது. 

► மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments