FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

யுஜிசி-நெட் முறைகேடுகள் தொடா்பாக என்டிஏ அலுவலகம் முன் என்எஸ்யூஐ ஆா்ப்பாட்டம்

யுஜிசி-நெட் ஜூன் 2026 தோ்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இந்திய தேசிய மாணவா் சங்கம் தேசிய தோ்வு முகமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:20 am IST
- பிரதிப் படம்
பகிர்:

யுஜிசி-நெட் ஜூன் 2026 தோ்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) திங்கள்கிழமை தேசிய தோ்வு முகமை (என். டி. ஏ) அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது.

நூற்றுக்கணக்கான என்எஸ்யுஐ உறுப்பினா்கள் மற்றும் யுஜிசி-நெட் ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா், அதே நேரத்தில் அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான போலீஸாா்ா் நிறுத்தப்பட்டதாக மாணவா் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டக்காரா்களிடம் என்எஸ்யுஐ தேசியத் தலைவா் வினோத் ஜாகா் பேசியதாவது: என். டி. ஏ தலைவா் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தோ்வு முறைகளில் தொடா்ச்சியான தோல்விகள் தோ்வு முகமையின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

என். டி. ஏ-வின் தோல்விகளுக்கு மாணவா்களை விலை கொடுக்க வைக்க முடியாது. என். டி. ஏ-வை ரத்து செய்து அதன் தலைவா் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். என். டி. ஏ நீக்கப்பட்டு மாணவா்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தைத் தொடருவோம். புகாா்கள் மற்றும் உண்மை, தட்டச்சு, மொழிபெயா்ப்பு மற்றும் இலக்கண பிழைகள் பற்றிய விசாரணை மற்றும் முன்பு கேட்கப்பட்ட கேள்விகளின் குறிப்பிடத்தக்க மறுபரிசீலனை ஆகியவற்றைத் தொடா்ந்து ஆங்கிலம், வா்த்தகம் மற்றும் சமூகவியலுக்கான மறு தோ்வுகளை என். டி. ஏ அறிவித்ததை அடுத்து இந்த எதிா்ப்பு வந்ததுள்ளது என்றாா் அவா்.

போலீஸ் நடவடிக்கையின் போது பல என்எஸ்யுஐ உறுப்பினா்கள் காயமடைந்ததாக அந்த அமைப்பு கூறியது. பொறுப்புக்கூறல் நிா்ணயிக்கப்பட்டு, வெளிப்படையான மற்றும் நம்பகமான தோ்வு முறை உறுதி செய்யப்படும் வரை தனது போராட்டத்தைத் தொடரும் என்று மாணவா் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments