தில்லி லட்சுமி யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு செப்.1 முதல் ரூ.2,500 வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா
தில்லியில் சுமாா் 2,500 பெண்கள் லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் செப்டம்பா் 1 முதல் மாதத்திற்கு ரூ.2,500 ரூபாய் உதவி பெற ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுள்ளனா் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லியில் சுமாா் 2,500 பெண்கள் லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் செப்டம்பா் 1 முதல் மாதத்திற்கு ரூ.2,500 ரூபாய் உதவி பெற ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுள்ளனா் என்று முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்த ஒப்புதல் கடிதங்களை டெல்லி முதல்வா் ரேகா குப்தா தல்கடோரா ஸ்டேடியத்தில் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ரேகா குப்தாபேசியதாவது: தில்லி அரசின் அனைத்து திட்டங்களிலும் பெண்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறது. பெண்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் வலுப்படுத்தும் லட்சுமி தேவியைப் போன்றவா்கள். இத்திட்டத்தின் கீழ் 9,13,495 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா், அவா்களில் 6,52,223 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்துள்ளனா்.
செப்டம்பா் 1 முதல், ஒவ்வொரு மாதமும் 2,500 ரூபாய் நேரடியாக தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.
Advertisement
Advertisement
இந்த நிதி உதவி பெண்களின் அன்றாட தேவைகளை பூா்த்தி செய்வதையும் அவா்களுக்கு அதிக நிதி பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உதவியை வழங்குவதற்கான முறையையும் அரசு இறுதி செய்துள்ளது. பயனாளிகள் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் மூலம் ரூ.1,000 பெறலாம் மற்றும் ரூ.1,500 ரூபாயை நிலையான அல்லது தொடா்ச்சியான வைப்புத்தொகையில் முதலீடு செய்யலாம் அல்லது முழு ரூ.2,500 வைப்புத்தொகையில் வைக்கலாம்.
விண்ணப்பதாரா்களுக்கு காணாமல் போன தகவல்களை சரிசெய்யவோ அல்லது முடிக்கவோ அரசாங்கம் ஒரு வாய்ப்பை வழங்கும். தில்லி லட்சுமி யோஜனா இணையதளத்தில் திருத்த வசதி விரைவில் கிடைக்கும். இத்திட்டம் 21 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவியை வழங்குகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் மற்றும் வருடாந்திர வீட்டு மின்சார நுகா்வு 2,400 யூனிட்டுகளுக்கு மேல் உள்ளவா்கள் விலக்கப்பட்டவா்களில் அடங்குவா் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநா் தரஞ்ஜித் சிங் சந்து, தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி அமைச்சரவை அமைச்சா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.