தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள்
தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் - முனைவர் மு.அருணாசலம்; பக்.246; ரூ.200; அருண் பப்ளிகேஷன்ஸ், திண்டுக்கல்-1; )984440530/94312411325. "சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளி
தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் - முனைவர் மு.அருணாசலம்; பக்.246; ரூ.200; அருண் பப்ளிகேஷன்ஸ், திண்டுக்கல்-1; )984440530/94312411325.
"சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளில் அரவாணிகளைப் பற்றிய செய்திகள், சமண காப்பியமான நீலகேசியில் அலிகளின் பிறப்பு என்பது தவக்கோட்பாடு இல்லாதவர்கள், முழு செவியும் அற்றவர்கள், நரகப் பிறப்பைப் பெற்றவர்கள்' என்பன போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளதாக நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். பாரதியின் கவிதைகளில் பேடி, அலி, எனச் சொல்லி அச்சமும், கோழைத்தனமும் நிறைந்தவர்கள் என்று பறைசாற்றுகிறார். எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் "வாடாமல்லி' நாவலில் அரவாணிகள் அனுபவிக்கும் கொடுமைகளையும், சித்திரவதைகளையும் இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. நாடகங்கள் மூலம் அரவாணிகளின் பிரச்னைகளை ஒழிக்க சங்கம் ஏற்படுத்தித் தீர்வு காணவேண்டும் என்பதை ஆணித்தரமாகப் பதிவு
செய்துள்ளார் நூலாசிரியர்.
Advertisement
Advertisement