தெய்வப்புலவர் திருவாய்மொழி (திருக்குறள் விளக்கவுரை)
ஒவ்வொரு குறளிலும் ஒரு புதிய பொருள் புரியும் வகையில் நூலாசிரியர் புதிய கோணத்தில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியிருப்பதுடன், அதை தற்காலத்திலும் எளிதில் புரியும் வகையிலும் எழுதியிருப்பதால் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் படிக்க வேண்டிய நூலாகவுள்ளது.
தெய்வப்புலவர் திருவாய்மொழி (திருக்குறள் விளக்கவுரை)- பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக். 656; ரூ. 850; முல்லைப் பதிப்பகம், சென்னை- 600 040. ✆ 98403 58301.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளுக்கு நவீன காலத்துக்கும் ஏற்ப விளக்கவுரை எழுத முடிகிறதென்றால் அதன் சமுதாய தீர்க்க தரிசனத்தை நாம் உணரலாம். பேராசிரியர் அரங்க. ராமலிங்கத்தின் விளக்கவுரை மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதைப் படித்தால் புரிந்துகொள்ளலாம். திருக்குறளில் திரு என்பதன் பொருளை சங்க இலக்கியத்தைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது தொடங்கி, அதை அறநூலாக பார்ப்பதற்கான காரணத்தையும் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடவுள் வாழ்த்தில் 'மலர்மிசை ஏகினான்' எனும் குறள் விளக்கத்தில் மலர்மிசை என்பதை இறைவனின் அடியார்களின் உள்ளத்தைக் குறிப்பிட்டு இருப்பதைக் கூறலாம். 'துப்பார்க்குத் துப்பாய' எனும் குறளை விளக்கும் நூலாசிரியர் மழை நீரே பல நோய் தீர்க்கும் மருந்தாகக் குறிப்பிட்டு தற்கால நீர் மருத்துவத்தை நினைவூட்டுவது பாராட்டத்தக்கது.
Advertisement
Advertisement
'செயற்கரிய செய்வார்' எனும் குறளில் செய்வதற்கு அரிய செயலைச் செய்தல் என்பதையே பலரும் விளக்கிவந்துள்ளனர். இந்நூலாசிரியரோ செயல்படுத்துவதற்கு அரியனவாகக் கூறப்படும் துறவறத்தை மேற்கொள்வோரை பெரியோர் எனக் குறிப்பிட்டிருப்பதும் பொருள் புதிதாக உள்ளது.
இப்படியாக ஒவ்வொரு குறளிலும் ஒரு புதிய பொருள் புரியும் வகையில் நூலாசிரியர் புதிய கோணத்தில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியிருப்பதுடன், அதை தற்காலத்திலும் எளிதில் புரியும் வகையிலும் எழுதியிருப்பதால் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் படிக்க வேண்டிய நூலாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.