இரும்புக் கதவுகள் திறக்கப்படும் தருணம்
இலக்கிய ஆர்வம் கொண்ட நூலாசிரியர் வார இதழ் ஒன்றில் எழுதிய 15 கட்டுரைகளை நூலாக்கியிருக்கிறார்.
இரும்புக் கதவுகள் திறக்கப்படும் தருணம்- இரா. மஞ்சுளா; பக். 132; ரூ. 200; ஸ்நேகா, சென்னை- 600 063, ✆ 98409 69757.
இலக்கிய ஆர்வம் கொண்ட நூலாசிரியர் வார இதழ் ஒன்றில் எழுதிய 15 கட்டுரைகளை நூலாக்கியிருக்கிறார்.
சங்க காலம் தொடங்கி, தற்காலம் வரையில் பெண்களின் நிலையை அவர்களின் உழைப்பை, அங்கீகாரத்தை, தன்னம்பிக்கையை புதிய கோணத்தில் நூலாசிரியர் அணுகி, சங்க இலக்கியப் பாடல்களை மேற்கொள் காட்டி ஒவ்வொரு கட்டுரையிலும் உரிய விளக்கங்களை அளிக்கிறார்.
Advertisement
Advertisement
'சும்மா இருப்பது சுகமா?', 'விடுதலையின் பாடல் பரவட்டும்', 'தங்கம் விற்கும் விலைக்கு', 'மீன் விற்ற காசு நாறாது!', 'இசைத் துறையில் பெண்களின் இதயத் துடிப்பு', 'சமூகத்தைப் பூக்க வைக்கும் மந்திரம்', 'வேர்கள் செய்யும் குடும்பப் பராமரிப்பு' என ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பைப் படிக்கும்போதே அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உருவாகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கும் சமமான விடுதலை வேண்டும் என்றும், அது பொருளாதார முன்னேற்றத்தில் அடங்கியிருக்கிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார். ஆண்களை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்த மகளிர் இன்று சம்பாத்தியத்தால் தற்சார்பு நிலையை எட்டி, குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும், திருமணத்துக்குப் பிறகும் தங்களது பெற்றோரைப் பாதுகாப்பதிலும், பொதுச்சேவையிலும் பல்வேறு துறைகளிலும் சாதனையாளர்களாக மின்னுகின்றனர் என்றும் அவர் விளக்குகிறார்.
பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையிலான இந்த நூல் மாணவிகள், வளரிளம் பெண்கள், குடும்பத் தலைவிகள் வாசித்தால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.