FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி -  பாடல் 7

பரம்பொருளாகிய சிவபெருமான் பழச்சுவை போன்று

Updated On : 8 ஜனவரி 2018, 3:21 pm IST
பகிர்:

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென
            எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை
    ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில் திரு வுத்தரகோச மங்கையுள்ளாய்
   திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெருமான்
        பள்ளி எழுந்தருளாயே.
 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்



பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

Advertisement

Advertisement

விளக்கம்

அது = சிவபெருமானாகிய பரம்பொருள். ஆறு = வழி.

பொருள்  

பரம்பொருளாகிய சிவபெருமான் பழச்சுவை போன்று இனிப்பாக இருப்பான் என்றும், அமுதம் போன்று சுவையாக இருப்பான் என்றும், அவன் நாம் அறிவதற்கு மிகவும் அரியவன் என்றும் அவன் நாம் அறிவதற்கு மிகவும் எளியவன் என்றும் தேவர்கள் உட்பட, பலரும் அவனது உண்மை நிலை அறியாமால் கூறுகின்றார்கள். தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலைகள் உடைய உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் திருவுருவம்தான் அந்த பரம்பொருளின் திருஉருவம், இவன்தான் அந்த பரம்பொருள், இவன் எங்களை ஆண்டுகொண்டுள்ளான் என்று நாங்கள் கூறுகின்றோம். திருப்பெருந்துறை தலத்தில் உறையும் மன்னவனே, நாங்கள் செய்ய வேண்டிய திருப்பணிகள் எவை எவை என்பதை எங்களுக்கு குறிப்பால் உணர்த்த நீ பள்ளி எழுந்தருள வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments