திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் ஆக.,24-ல் தொடக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா இந்தாண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா இந்தாண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 23-ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறுகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வருகிற 24-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களைப் பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் திருக்கோயில் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும். இந்தத் தகவலை கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.