FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருமலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி

திருமலையில் புதன்கிழமை காலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தீர்த்தவாரி.
பகிர்:


திருமலையில் புதன்கிழமை காலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட துவாதசி அன்று காலை தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணியளவில் ஏழுமலையான் கோயிலிருந்து சக்கரத்தாழ்வாரை திருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயிலுக்கு எழுந்தருளச் செய்தனர்.
அதைத் தொடர்ந்து ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் திருக்குளத்தில் தீர்த்தவாரி உள்ளிட்டவை 5.30 மணி வரை நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் 66 ஆயிரம் கோடி தீர்த்தங்கள் இணைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் திருக்குளத்தில் புனித நீராடினால் 66 ஆயிரம் தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும் என்பதால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments