FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

Updated On : 22 மார்ச் 2018, 1:01 pm IST
பகிர்:


சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. 

விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 5.15 முதல் 5.45 மணிக்கு கொடியேற்ற விழா நடைபெற்றது. மார்ச் 24-ல் அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடக்கிறது. 

Advertisement

Advertisement

மார்ச் 26-ல் வெள்விடை பெருவிழா காட்சி நடக்கிறது. அடுத்த நாள் பல்லக்கு விழாவும். முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா மார்ச் 28-ல் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்வார். காலை 6,00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments