அறுபத்து மூவர் உலாவுக்கு காத்திருக்கும் மக்கள்: விழாக்கோலம் பூண்ட மயிலை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், மதிய உணவு இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது.
இன்று மாலை 3 மணியளவில் அறுபத்து மூவர் உலா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அப்போது திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இரவில் பார்வேட்டை விழா, ஐந்திருமேனிகள் விழா ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.