முகப்பு
செய்திகள்

எவ்வளவு காற்று அடித்தாலும் அசையாமல், ஆடாமல் நின்று எரியும் அதிசயத் திருவிளக்குகள்!

திருப்பதி அருகேயுள்ள காளஹஸ்தி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளஹஸ்தி நாதர் திருக்கோயிலின்..

Updated On : 24 நவம்பர் 2018, 5:49 pm IST
பகிர்:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அசல தீபேசுவரர் திருக்கோயில் கருவறை விளக்குகள் திருச்சுடர், எவ்வளவு காற்று அடித்தாலும் அசையாமலும் ஆடாமலும் நின்று நிதானமாக நிலைத்து பிரகாசமாக ஒளிர்வதைத் தரிசிக்கலாம்.

திருப்பதி அருகேயுள்ள காளஹஸ்தி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளஹஸ்தி நாதர் திருக்கோயிலின் கருவறைத் திருவிளக்குகளில் ஒரு திருச்சுடர் மட்டும் காற்றால் தாக்கப்படுவதைப் போல் எப்போதும் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். அந்தத் திருச்சுடரின் நடனக்கோலம், "வாயுவின் வடிவில் இறைவன் நிலைத்து நிற்கின்றான்' என்பதை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

திருச்சி, மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள திருத்தலம் திருப்பைஞீலி. இங்கு அமைந்துள்ள ஸ்ரீ நீலிவனேஸ்வரர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதிலாக ஒன்பது குழிகளே உள்ளன. அவற்றில் நெய் வார்த்து, திரியிட்டு விளக்கேற்றி அந்த ஒன்பது சுடர்களை நவக்கிரகங்களாக வழிபடுகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments