அத்திவரதரை கடந்த 7 நாட்களில் 6 லட்சம் பேர் தரிசனம்!
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம்..
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
கடந்த 7 நாள்களில் இதுவரை சுமார் 6.16 லட்சம் பேருக்கு மேல் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று வார விடுமுறை நாள் என்பதால் அதிகாலை 3 மணியிலிருந்து திரளானோர் காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.
Advertisement
Advertisement
ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை
ஜூலை 1-ஆம் தேதி: 1 லட்சம்
ஜூலை 2-ஆம் தேதி: 70 ஆயிரம்
ஜூலை 3-ஆம் தேதி: 75 ஆயிரம்
ஜூலை 4-ஆம் தேதி: 45 ஆயிரம்
ஜூலை 5-ஆம் தேதி: 85 ஆயிரம்
ஜூலை 6-ஆம் தேதி: 1.16 லட்சம்
ஜூலை 7-ஆம் தேதி: 1.25 லட்சம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.