முகப்பு
செய்திகள்

அத்திவரதரை கடந்த 7 நாட்களில் 6 லட்சம் பேர் தரிசனம்!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம்..

Updated On : 8 ஜூலை 2019, 12:43 pm IST
பகிர்:

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

கடந்த 7 நாள்களில் இதுவரை சுமார் 6.16 லட்சம் பேருக்கு மேல் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று வார விடுமுறை நாள் என்பதால் அதிகாலை 3 மணியிலிருந்து திரளானோர் காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.

Advertisement

Advertisement

 ஜூலை 1-ஆம் தேதி முதல்  அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை

 ஜூலை 1-ஆம் தேதி: 1 லட்சம்

 ஜூலை 2-ஆம் தேதி: 70 ஆயிரம்

 ஜூலை 3-ஆம் தேதி: 75 ஆயிரம்

 ஜூலை 4-ஆம் தேதி: 45 ஆயிரம்

 ஜூலை 5-ஆம் தேதி: 85 ஆயிரம்

 ஜூலை 6-ஆம் தேதி: 1.16 லட்சம்

 ஜூலை 7-ஆம் தேதி: 1.25 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments