ரத்தனகிரி முருகன் 
செய்திகள்

ரத்தினகிரி முருகன் கோயிலில் காவடி சுமந்து பக்தர்கள் வழிபாடு!

சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாகக் காவடியைத் தோளில் சுமந்தபடி பிரார்த்தனை.

DIN

ராணிப்பேட்டை, ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாகக் காவடியைத் தோளில் சுமந்தபடி பம்பை மேளங்கள் முழங்கப் பக்தி பாடல்களைப் பாடி நடனம் ஆடி நடைப்பயணமாக ஆலயத்திற்கு வருகை தந்து பாலமுருகனைத் தரிசனம் செய்தனர். தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டு அருளாசி பெற்றனர்.

பக்தி பரவசத்தில் பக்தர்கள்

முன்னதாக அருள்மிகு பாலமுருகன் சாமிக்கு பாலமுருகன் அடிமை சாமிகளின் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு உள் மாவட்ட மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதல் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டினை மேற்கொண்டனர்.

காவடி சுமந்து பெண்கள் வழிபாடு

பக்தர்களின் நலன் கருதி மருத்துவக் குழுவினர் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவைகள் கோயில் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT