முகப்பு
செய்திகள்

குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Updated On : 8 டிசம்பர் 2025, 4:16 pm IST
கும்பாபிஷேகம்
பகிர்:

கோவையில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மத்வராயபுரம் கூடுதுறை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு யாக குண்டம் அமைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை விநாயகர், குழந்தை வேலாயுத சாமி, துர்க்கை அம்மன், சப்த கன்னிமார்கள், கருப்பண்ணசாமி, இடும்பன் சுவாமி, அகத்தியர், நவகிரக மூர்த்திகளுக்கு கும்பத்திலும் மற்றும் விமான கோபுரத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் மோட்டார் பம்ப் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கோயில் நிர்வாகிகள் சோமசுந்தரம், மோகன்குமார், ஆனந்தகுமார், கதிர்வேல், ராமசாமி, நடராஜன், பிரபு, கதிர்வேல்,ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

summary

The Ashtabandhana Maha Kumbabhishekam ceremony was held with great fanfare at the Velayudha Swamy Temple in Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments