தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை!
தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவையை பக்தர்கள் தரிசித்தனர்.
தஞ்சையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தஞ்சாவூர் மாநகரில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல் இந்தாண்டு கருட சேவை இன்று நடைபெற்றது. இதில் 108 வைணவ தலங்களைச் சேர்ந்த நீலமேக பெருமாள், மாமனிக்குன்ற பெருமாள், வீர நரசிம்ம பெருமாள்கள் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளுக்கு வந்தடைந்தனர்.
Advertisement
Advertisement
அதனை தொடர்ந்து மாநகரில் பிரசித்தி பெற்று விளங்கும் வெங்கடேச பெருமாள் ஆலயம், கோதண்ட ராமர் ஆலயம், வரதராஜப் பெருமாள் ஆலயம், ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளிட்ட 27 ஆலயங்களில் இருந்து பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்த கருட சேவை நிகழ்வில் தஞ்சாவூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஒரு இடத்தில் கருடசேவையில் எழுந்தருளிய பெருமாள்களை தரிசனம் செய்தனர்.