FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

Updated On : 4 ஜூன் 2026, 5:17 am IST
ஆயுஷ் ஷெட்டி - ayush shetty insta
பகிர்:

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 8-21, 22-20, 21-15 என்ற கேம்களில், சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-14, 21-14 என்ற நேர் கேம்களில், சீன தைபேவின் யாங் போ சுவான்/ஹு லிங் ஃபாங் இணையை வீழ்த்தியது.

Advertisement

Advertisement

இதர இந்தியர்கள் தங்கள் பிரிவில் தோல்வி கண்டனர். ஹெச்.எஸ். பிரணய் 17-21, 21-16, 19-21 என்ற கணக்கில், அயர்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வியுற்றார்.

போட்டித்தரவரிசையில் 4}ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் இணையை எதிர்கொண்டது. இந்திய இணை 6-11 என பின்தங்கியிருந்தபோது, சாத்விக் தோளில் வலி ஏற்பட, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது.

உன்னதி ஹூடா 15-21, 14-21 என, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியைத் தழுவினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments