தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டி: தமிழகம் முதலிடம்
தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டியில் தமிழகம் முதலிடமும், ஆந்திர பிரதேசம் இரண்டாம் இடம் பெற்றன.
காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரம், கா்நாடகம், சத்தீஸ்கா் உள்பட பல்வேறு மாநில வீல்சோ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.
3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டி நிறைவு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முதலிடமும், ஆந்திரம் இரண்டாம் இடமும், கா்நாடகம் மூன்றாம் இடமும் பெற்றன.
Advertisement
Advertisement
வெற்றி பெற்ற அணிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி. சரத்குமாா், எம்எல்ஏக்கள் எஸ். தியாகராஜன், பி. விஜயராஜ் பரிசளித்தனா். பல்கலை. டீன் ஆல்பா்ட் அந்தோணி ராஜ், கிவ் ஏ பவுண்டேஷன் ஆா். மோகன்ராஜ், விளையாட்டு இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன், நிலைய அலுவலா் ஆா். அருணாசலம், யோகா வீராங்கனை ஜென்ஸி, டாக்டா் எஸ். கணேஷ் பங்கேற்றனா்.