FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஃபின் ஆலன் சதம்: டிஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது சான்பிரான்சிஸ்கோ அணி!

மேஜர் லீக் டி20 தொடரில் டிஎஸ்கே அணியை சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

Updated On : 27 ஜூலை 2024, 10:46 am IST
டு பிளெஸ்ஸி, ஃபின் ஆலன் - படம்: எம்எல்சி / எக்ஸ்
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.

சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன.

இதில் வாஷிங்டன் ஃபீரிடம் என்ற அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். முதல் பிளே ஆஃப் சுற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது வாஷிங்டன் அணி.

Advertisement

Advertisement

எலிமினேட்டரில் வென்ற டிஎஸ்கே அணி குவாலிஃபையரில் தோற்ற சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 20 ஓவர் முடிவில் 200/6 ரன்கள் எடுத்தது. ஃபின் ஆலன் 52 பந்தில் சதமடித்து அசத்தினார். இங்கிலீஷ் 37 ரன்கள், ஹாசன் கான் 27 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து ஆடிய டிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 190/4 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதிகபட்சமாக கான்வே 62, டு பிளெஸ்ஸி 45, ஜோஷுவா 56 ரன்களும் எடுத்தார்கள்.

இதனால் சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி மீண்டும் இறுதிப் போட்டியில் வாஷிங்டன் ஃபிரீடம் அணியை எதிர்கொள்கிறது. பிளே ஆஃபில் தோற்றதற்காக வாஷிங்டன் ஃபிரீடம் அணியை பழிவாங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments