முகப்பு
கிரிக்கெட்

சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

சிஎஸ்கே குறித்து தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

கிரிக்கெட்

சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

சிஎஸ்கே குறித்து தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

Updated On : 26 நவம்பர், 2024 at 6:29 AM
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் நட்சத்திர வீரராக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தோனியுடன் தீபக் சாஹர் - ஜெயா சாஹர் இணை

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது நிகழ்ந்த மறக்க முடியாத தருணங்கள் பல நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உருக்கமாகப் பேசியுள்ளார் தீபக் சாஹரின் மனைவி ஜெயா சாஹர்.

சென்னையை விட்டு பிரிய மனமில்லை: இது குறித்து, ஜெயா சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளராக அமர்ந்து உற்சாகப்படுத்திய தருணங்கள் தொடங்கி, அதே மைதானத்தில் காதலை கொண்டாடியது வரை, அப்போது அங்கே தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தி சம்ம்மதம் கேட்டபோது - ‘ஆம்’ என ஒட்டுமொத்த உலகமும் பார்க்க நான் சம்மதம் தெரிவித்ததும் மறக்கவே முடியாத நினைவுகள்.

எனது நெஞ்சம் எப்போதும் இந்த அணியுடன் பிணைந்திருக்கும்.

இந்த அற்புதமான நினைவுகளுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் - சென்னை சூப்பர் கிங்ஸ், தீபக் சஹார்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →