ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டார். அதற்கு முன்னதாக விராட் கோலி ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார்.
பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜத் படிதார் அல்லது கோலி நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புதிய கேப்டனாக ரஜத் படிதாரை ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆர்சிபி அணி வீரர்கள்
விராட் கோலி, ரஜத் படிதார், யஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார், சுயாஷ் சர்மா, க்ருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பண்டேஜ், எல். ஸ்வஸ்திக் சிக்கரா, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.