வியான் முல்டர், பிரையன் லாரா கோப்புப் படங்கள்.
கிரிக்கெட்

சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும்..! 400+ அடிக்காமல் விட்ட முல்டரிடம் பேசிய பிரையன் லாரா!

டெஸ்ட்டில் 400+ ரன்களை அடிக்காமல் விட்ட வியான் முல்டரிடம் பிரையன் லாரா பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

வியான் முல்டரிடம் பிரையன் லாரா மீண்டும் ஒருமுறை தன்னுடைய சாதனனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்துவிடு எனக் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 334 பந்துகளில் 367* ரன்கள் எடுத்திருந்தார். பிரையன் லாராவின் 400* சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டிக்ளேர் செய்தது அதிர்ச்சியாகவிருந்தது.

லாராவின் சாதனைக்கு மதிப்புக்கொடுத்து தான் இப்படி செய்ததாக முல்டர் கூறியிருந்தார். பலர் வாழ்த்துகளைத் தெரிவிக்க, கிறிஸ் கெயில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பிரையன் லாரா தன்னிடம் பேசியதாக வியான் முல்டர் கூறியதாவது:

நான் பிரையன் லாராவிடம் சிறிது பேசினேன். அவர் என்னிடம் ‘நீங்கள் உங்களது சொந்த சாதனையை உருவாக்குங்குள். நீங்கள் அந்த வாய்ப்பினை விட்டிருக்கக் கூடாது. சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை முறியடிக்க வேண்டும்’ எனக் கூறியதாகக் கூறினார்.

இருப்பினும் நான் அப்போது எடுத்த முடிவு சரியானதெனவே நினைக்கிறேன். அதுதான் நான் கிரிகெட் மீது வைத்துள்ள மரியாதையைக் குறிப்பிடுக்கிறது என்றார்.

Wiaan Mulder, who declared the South African innings when he was 367*, says Brian Lara told him that he should have gone ahead and broken his 400* record.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

காஸாவில் செய்தியாளா்கள் கொல்லப்படுவது அதிா்ச்சி- வெளியுறவு அமைச்சகம்

SCROLL FOR NEXT