மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களும் பெண்களே..! ஐசிசி அதிரடி!
மகளிர் உலகக் கோப்பையில் ஐசிசியின் புதிய அறிவிப்பு குறித்து...
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா, இலங்கையில் செப்.30ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் முதல்முறை...
Advertisement
Advertisement
மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களுக்கான பரிசுத் தொகையை ஐசிசி ஆடவர் அணிக்கு நிகராக உயர்த்தியது.
இந்நிலையில், மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நடுவர்களும் மகளிராக இருப்பார்களென அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் இருக்க வேண்டுமென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடுவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய வீராங்கனைகளான விருந்தா ரதி, என். ஜனனி, காய்த்ரி வேணுகோபாலன், ஜிஎஸ் லக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலின சமத்துவம் எனும் மைல்கல்...
இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:
நடுவர்கள் குழுவில் அனைவரையும் பெண்களாக பணியமர்த்தியது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் என்பதின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக பார்க்கிறோம்.
இந்த வளர்ச்சி அடையாள மதிப்பைத் தாண்டியது. கண்ணால் காணத்தக்க, வருங்காலத்தில் பலரையும் உத்வேகம் கொள்ளதக்க வாய்ப்பாக அமையும் என்றார்.
இந்த உலகக் கோப்பையில் 8 அணிகள் மோதுகின்றன. நவ.2ஆம் தேதி இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன.
போட்டி நடுவர்கள்: ட்ரூடி ஆண்டர்சன், ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜிஎஸ் லட்சுமி, மிஷேல் பெரேரா.
நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கேன்டேஸ் லா போர்டே, கிம் காட்டன், சாரா தம்பனேவானா, ஷதீரா ஜாகிர் ஜெஸி, கெரின் கிளாஸ்டெ, என். ஜனனி, நிமாலி ஃபெரேரா, கிளாரி பொலோசக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியஸ்.
Insisting that it was more than a symbolic gesture, the International Cricket Council (ICC) on Thursday announced an all-female officials line-up for the ODI World Cup which begins later this month in India and Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.