டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் உள்ள இளம் இந்திய வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் உள்ள இளம் இந்திய வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்களான பிரியன்ஷ் ஆர்யா 39 ரன்கள் (11 பந்துகளில்), பிரப்சிம்ரன் சிங் 43 ரன்கள் (34 பந்துகளில்), ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் (29 பந்துகளில்) எடுத்து அணியின் வெற்றி உதவினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் எனவும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து பஞ்சாப் அணியை கட்டமைத்துள்ளதாகவும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாப் ஆர்டரில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பானவர்கள். இளம் இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் கட்டமைத்துள்ளோம். ஐபிஎல் ஏலத்தில் எங்களது திட்டம் தெளிவாக இருந்தது. பிரப்சிம்ரன் மற்றும் ஷஷாங் சிங்கை தக்கவைத்தன் மூலம், நான் எந்த வீரர்களுடன் பஞ்சாப் அணி கட்டமைக்கப்பட வேண்டும் என நினைத்தேனோ அந்த வீரர்களை வாங்க முடிந்தது.
அந்த வரிசையில் முதலிடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர்தான் இருந்தார். அதே நேரத்தில், தரமான இந்திய வீரர்களை அணியில் இடம்பெற செய்வது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணியில் இணைந்தனர் என்றார்.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷஷாங் சிங் மட்டுமே தக்கவைப்பட்டதால், அந்த அணி ரூ. 110.5 கோடி என்ற மிகப் பெரிய தொகையுடன் ஏலத்தில் பங்கேற்றது. இந்த தொகையின் மூலம், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற முக்கிய வீரர்கள் வாங்கப்பட்டனர்.
கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Punjab Kings coach Ricky Ponting has praised the young Indian players in the team's top order, describing them as highly talented.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.