திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!
திலக் வர்மாவிடம் பேசியது பற்றி மனம் திறந்த ஹார்திக் பாண்டியா குறித்து...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா சக வீரர் திலக் வர்மாவிடம் பேசியது குறித்து போட்டிக்குப் பிறகு விளக்கம் தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றிரவு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 199/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் திலக் வர்மா முதலில் 22 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தவர், ஹார்திக் பாண்டியாவின் உத்வேக பேச்சுக்குப் பிறகு, அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். மொத்தமாக, 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Advertisement
சமூகவலைதளத்தில் ஹார்திக் பாண்டியாவின் ஆரா (aura) குறித்து மிகவும் புகழ்ந்து பேசிவருகிறார்கள். அப்படி என்னதான் பேசியிருப்பார் என அனைவரையும் வியக்க வைத்தது. போட்டிக்குப் பிறகு, இது குறித்து ஹார்திக் பேசியிருப்பதாவது:
திலக் வர்மாவிடம் இருக்கும் திறமைக்கு அவர் பெரிதாக கவலைப்படவே தேவையில்லை. நான் ஒரேயொரு செய்தியை மட்டுமே அவரிடம் திரும்ப திரும்ப சொல்லினேன். உன்னிடம் திறமை இருக்கிறது, பந்தைப் பார்த்து அடி. பந்து திரும்பினாலும் கவலையில்லை. ஏனெனில், அவரது பேட்டில் பந்து பட்டால் அது சிறப்பாக பயணிக்கும் என நம்புகிறேன் என்றார்.
அதிகமாக நான் பேசியதால் எனகுத் தலைச் சுற்றல் வந்தது. ஆனால், அது திலக் வர்மாவுக்குத் தேவைப்பட்டது. மும்பை இந்தியன்ஸுக்கு தேவைப்பட்டது. அந்த மாதிரியான ஒரு ஆற்றல் கேப்டனாக அணிக்கு அளிக்க வேண்டியிருந்தது என்றார்.