சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார்!
சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானாது குறித்து...
சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார் என்ற செய்தி வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
வான்கடே திடலில் இன்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணியும் சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை செய்யவிருக்கின்றன. இதில் வெல்லும் அணி பிளே ஆப்ஸுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிஎஸ்கே அணியில் முகேஷ் சௌதரி கடந்த போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
Advertisement
இந்த நிலையில், அவரது தாயார் பிரேம் தேவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த ஓராண்டாக மும்பையில் டாடா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இறப்புச் செய்தி தெரிய வந்ததும் அணியில் இருந்து முகேஷ் சௌதரி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக தோனி மருத்துவமனைக்குச் சென்று முகேஷ் சௌதரியின் தாயாரைப் பார்த்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். தற்போது, சிஎஸ்கே நிர்வாகம் பிரேம் தேவிக்கு தங்களது அஞ்சலியை தெரிவித்துள்ளது.