முகப்பு
கிரிக்கெட்

அம்மாவுக்காக விளையாடிய மகன்..! சிஎஸ்கே பகிர்ந்த முகேஷ் சௌதரிக்கான பதிவு!

முகேஷ் சௌதரிக்காக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட பதிவு குறித்து...

Updated On : 24 ஏப்ரல் 2026, 12:58 pm IST
முகேஷ் சௌதரிக்காக சிஎஸ்கே வெளியிட்ட புகைப்படம். - படம்: எக்ஸ் / சென்னை ஐபிஎல்
பகிர்:

சிஎஸ்கே நிர்வாகம் தனது அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌதரிக்காக வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார். இந்தச் சூழ்நிலையில் இருந்தும் நேற்று (ஏப்.23) வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கினார்.

நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில், முகேஷ் சௌதரி மும்பையில் தொடக்க வீரர் டி காக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த வெற்றியை முகேஷ் சௌதரிக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார்.

போட்டியின்போது முகேஷ் சௌதரி குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருந்ததாவது:

சில தருணங்கள் போட்டியை விடப் பெரியது.

வார்த்தைகளால் சொல்ல முடியாத இழப்புக்குப் பிறகு, விளையாட வந்தது உங்களது மன வலிமையைக் காட்டுகிறது. இன்று ஒரு கிரிக்கெட்டராக மட்டுமே விளையாடவில்லை, மகன் தனது அம்மாவுக்காக விளையாடுகிறான்.

ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு பந்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். சிஎஸ்கே அணி, ரசிகர்கள் என அனைவரும் உங்கள் பக்கத்தில் இருக்கிறோம். பலம், பிரார்த்தனைகள், மஞ்சள் நிறம் எப்போதுமே முகேஷ் எனக் கூறியுள்ளது.

summary

Some moments are bigger than the game csk special post for Mukesh Choudhary mother lose

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.