FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய லாமிச்சானே நேபாள அணியின் புதிய கேப்டனாக நியமனம்!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய லாமிச்சானே நேபாள அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:40 pm IST
லாமிச்சானே.
பகிர்:

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி விடுவிக்கப்பட்ட சந்தீப் லாமிச்சானே நேபாள கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பைக்காக நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரோஹித் பவுடேலுக்குப் பதிலாக அணியின் புதிய கேப்டனாக 26 வயதான சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் ஆக. 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி வரை ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த சந்தீப் லாமிச்சானே, 2022 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கினார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் மேல்முறையீடு செய்து தண்டனையிலிருந்து தப்பினார்.

ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய முதல் நேபாள வீரர் என்ற பெருமையைப் பெற்ற சந்தீப் லாமிச்சானேவின் தலைமையில் நேபாள சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Sandeep Lamichhane has returned as Nepal's ODI captain, replacing Rohit Paudel ahead of the ACC Men's Premier Cup 2026. Nepal will begin their campaign against Bahrain on August 31, with the tournament running in Malaysia until September 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments