யு19 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
31 ஓவர்கள் முடிவில் 147/2 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தற்போது களத்தில் ஃபைசல் ஷினோஜடா 58 உசைருல்லாஹ் நியாசாய் 16 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்தியா சார்பில் கனிஷ்க் சௌஹான், தீபேஷ் தேவேந்திரன் தலா 1 விக்கெட் எடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.