இந்திய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் தேர்வு..! அணியில் இடம்பிடித்த 15 வயதான சூர்யவன்ஷி!
ஆசிய போட்டிகளுக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஆசிய போட்டிகளுக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டி20 அணியில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்திய டி20 அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஸ்னோய், அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரீத் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், ஹர்சித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ்ச் சூர்யவன்ஷி.
முன்னதாக டி20 உலகக் கோப்பையை வென்ற சமீபத்தில் மோசமாக விளையாடிவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.